தாகத்திற்காக குடத்தில் தலையை விட்டு சிக்கி கொண்ட நாய்…

இன்று (02/06/2019) மதியம் சுமார் 3 மணி அளவில் மதுரை திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் அருகே  நாய் குடிநீருக்காக குடத்தின் உள்ளே தலையை விட்டு மாட்டி கொண்டது.

தலையை எடுக்க முடியாமல் மாட்டிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து தடுமாறி கீழே விழுந்தது.  பின் அப்பகுதி மக்கள் அந்த நாயைப் பிடித்து குடத்தை லாவகமாக வெளியே எடுத்தனர்.  பின் நாய் நிம்மதி பெருமூச்சு விட்டு தப்பி ஓடியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..