மதுரை மாநகர் E3-அண்ணாநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வண்டியூர் ரோடு சந்திப்பில் பொதுமக்களுடைய பாதுகாப்பிற்காகவும், அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும், குற்றம் நிகழாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் சோதனைச்சாவடியை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., இன்று(31.05.19) துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையர் அண்ணாநகர் ச&ஒ சரகம் திருமதி.லில்லி கிரேஸ், E3-அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.