மதுரை அருகே ஒருவர் கொடூரமான முறையில் கொலை…

மதுரை மாவட்டம் முத்துப்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சௌந்தர் வயது 42.  இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்றாவது மாடியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம்(25/05/2019)  மர்ம நபர்கள் சிலர் அவர் தலையை தனியாக அறுத்து கொலை செய்து,   தலையை மதுரை பைபாஸ் சாலை போடி லயன் பகுதியில் தூக்கி எறிந்துள்ளனர். இக்கொலை முன் விரோதம் காரணமாக நடத்தப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

இந்த கொலை குறித்து மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..