10
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணவாய்பட்டியைச் சேர்ந்த பரமன் மகன் சீனிவாசன் (17), சௌந்திரபாண்டி மகன் விக்னேஷ் ( 25), இளையராஜா மகன் செங்குட்டுவன் ( 25) ஆகிய 3 பேரும் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து தனது இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 6.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அப்போது அவர்களில் இரண்டு பேரை கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவானார். தரைமறைவானவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment.