தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி நகர்க்குழுவின் சார்பில் கடந்த 16.07.18 அன்று பழனி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கட்டண கழிப்பறைகளிலும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்றும்,
அந்தந்த கழிப்பறைகளின் முன்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் என்கிற வாசகங்களை தாங்கிய விளம்பர பலகை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பழனி நகராட்சியை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் TARATDAC நடத்தியது.
போராட்டத்தின் விளைவாக தற்போது பழனி நகராட்சி ஆணையாளர் அவர்கள் பழனி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கழிப்பறைகளிலும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்றும், இலவச அறிவிப்பை அனைத்து நகராட்சி கட்டண கழிப்பறைகளின் முன்பாகவும் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு அதற்க்கான கடிதத்தின் நகலை சங்கத்திற்கு கொடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று அனைத்து கழிப்பறைகளிலும் இலவச அனுமதி ஆணை வழங்கிய பழனி நகராட்சி ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி நகர்க்குழு சார்பில் S. மாலதி – நகர தலைவர் P.தங்கவேல் – நகர செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.