இராமநாதபுரத்தில் நியூ புல்லட் பயிற்சி வகுப்பு..

தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட இரண்டு சக்கர மோட்டார் வாகனம் பழுது நீக்குவோர் நலச் சங்கம் இணைந்து நியூ புல்லட் பயிற்சி வகுப்பு இராமநாதபுரத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் மு.வரதராஜன் தலைமை வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.குமாரவேலு வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பி.ராமர், மாநில கவுரவ தலைவர் அறிவழகன், மாநில துணைச் செயலாளர்கள் கே.சம்பத், எஸ்.செய்யது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திறன் மேம்பாட்டு துறை மாவட்ட திட்ட துணை இயக்குனர் எஸ். ரமேஷ்குமார், சிவகங்கை மாவட்ட தலைவர் கே.ஆர்.எஸ்.ராஜேந்திரன் துவக்கி வைத்தனர்.

மாநில தலைவர் பா.குப்புசாமி மாநிலச் எஸ்.செயலாளர் குமாரவேலு மாநில பொருளாளர் எம்.ஜமால் முகமது, மாநில ஆலோசகர், பயிற்றுநர் ஏ.பசீர் அகமது ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

வட்டாரத் தலைவர்கள் வி.கண்ணன் (ஆர்.எஸ்.மங்கலம்), பி.சங்கர் (மானாமதுரை), பி.வேலுமணி (மானாமதுரை, செயலாளர்), எம்.சந்திரசேகர் ( திருப்பத்தூர்), வி.மரிய ஜேம்ஸ் (செயலர்,பரமக்குடி), கே. சங்கரலிங்கம் (முதுகுளத்தூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கே.கூரி தாஸ் நன்றி கூறினார். புதிய புல்லட் உதிரி பாகங்கள் பழுது நீக்குதல், எளிதாக இயக்குதல், எரிபொருள் சிக்கனமாக இயக்குதல் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு நாள் பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..