Home செய்திகள் மதுரை ரயில் நிலையம் கிழக்கு பகுதியில் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட இரு சக்கர வாகன நிறுத்த நிலையம்..

மதுரை ரயில் நிலையம் கிழக்கு பகுதியில் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட இரு சக்கர வாகன நிறுத்த நிலையம்..

by ஆசிரியர்

மதுரை ரயில் நிலையத்தில் கிழக்கு நுழைவாயிலில் செயல்பட்டு வந்த இரு வாகன காப்பகங்கள் கடந்த சில நாட்களாக எந்த அறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளது.  அந்நிலையத்மில் உள்ள வாகனங்களும் எந்தவித பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்ளது.

மேலும் வண்டி திருடு போகும் அபாயமும் உள்ளது என வாகன உரிமையாளர்கள் கூறுகிறார்கள். மேலும் டோக்கன் கொடுத்து விட்டு இப்படி வாகனத்தை பாதுகாப்பின்றி போட்டு சென்றதாகவும், இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாகனங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.  மேலும்  திடீரென “இங்கே நிறுத்தும் வாகனங்களுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பு இல்லை” என அறிவிப்பு பலகையும் வைத்து வாகன உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!