19.05.19 அன்று நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 2000 காவலர்களை நியமிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அமைதியான முறையில் நடத்திட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மற்றும் 12 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் வாகன ரோந்துப் பணி நகரின் முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 6 நான்கு சக்கர வாகன ரோந்து குழுக்களும், 14 இரு சக்கர வாகன ரோந்து குழுக்களும் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம் காவல் நிலையங்களின் எல்லைப்பகுதிகளில் அதிகமான ரோந்து பணி மேற்கொள்ள மூன்று அதிவிரைவு படையான டெல்டா வாகனங்கள் பணியில் உள்ளனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.