திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்குறிஞ்சி நகர் பகுதியில் கீழ் சர்வே நம்பர் பகுதியை சேர்ந்த ஆனந்த், தனுஸ், ஜெகதீஸ் ஆகியோர் பள்ளி விடுமுறையை ஒட்டி அப்பகுதியில் உள்ள நீரோடையில் தனது நண்பர்களுடன் 5 பேர் உடன் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது நீரோடையில் பந்து எடுக்க சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நீரில் தவறி விழ்ந்துள்ளனர். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம்போராடி நீரில் மூழ்கி இறந்த ஆனந்த், தனுஸ், ஜெகதீஸ் ஆகிய மூவரை மீட்டனர். தொடர்ந்து அவர்களது உடலை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்ற்னர். சாலை வசதி இல்லாததே மூவர் இறப்பிற்குகாரணம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.