இராமநாதபுரம் மறவர் தெருவைச் சேர்ந்தவர் சேகர், 54. இதே பகுதியைச் சேர்ந்தவர் வரதன்,38. தி.மு.க., தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் சேகருக்கு மறவர் தெருவில் 3 சென்ட் நிலம் வாங்கி தருவதாக வரதன் கூறியுள்ளார். இதை அடுத்து வரதனிடம் ரூ. 14.80 லட்சத்தை சேகர் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட நிலத்திற்காக பணம் பெற்றுக் கொண்டதாக நூறு ருபாய் பத்திரத்தில் வரதன் உறுதி மொழி ஆவணம் எழுதி கொடுத்தார். விசாரணையில் பத்திரத்தில் குறிப்பிட்ட நிலமானது வரதனுக்கு சொந்தமானதல்ல என்பது சேகருக்கு தெரியவந்தது.
இதனால், கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு வரதனிடம், சேகர் கேட்டபோது, பணத்தை வரதன் திருப்பித் தரவில்லை .இது குறித்து சேகர் புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து வரதனை கைது செய்து ராமநாதபுரம் மாவட்ட -2- வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது கடந்த 2015 ஆம் ஆண்டில் முருகேசன் என்பவர் கொடுத்த புகாரில் நில மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. இது போன்று பலர் இவர் மீது நில மோசடி புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.