Home செய்திகள் அந்தமானில் நடந்த யோகா போட்டியில் தமிழக பெண்கள் சாதனை..!

அந்தமானில் நடந்த யோகா போட்டியில் தமிழக பெண்கள் சாதனை..!

by ஆசிரியர்

அந்தமானில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில், கோவையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அந்தமானில், கடந்த 26ம் தேதி தொடங்கி தொடர்ந்து 4 நாட்களாக, 4வது தேசிய அளவிலான சப் ஜூனியர், சூப்பர் ஜூனியர் என பல்வேறு பிரிவுகளில் யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து 47 பேர் உட்பட, நாடு முழுவதிலும் இருந்து 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இதில், தமிழகத்தின் கோவை ஞானம்மாள் ஓசோன் யோகா பயிற்சி மையத்திலிருந்து பாலகிருஷ்ணன் தலைமையில் சென்றிருந்த 20 பேரில், 30 முதல் 40 வயது உடையவர்களுக்கான யோகாசனப் போட்டியில் கௌசல்யா என்பவர் முதல் பரிசாக தங்கப் பதக்கமும், புவனேஸ்வரி என்பவர் இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக கற்றுக்கொண்ட பாரம்பரிய யோகா பயிற்சி முறையில், இரண்டு பெண்கள் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!