இன்று (02.05.19)மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.அருண்பாலகோபாலன் IPS., உத்தரவுப்படி மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கி துண்டுபிரசுரத்தில் உள்ள வாசகங்களை வாசிக்கவைத்து அதன் பின்னர் உறுதிமொழி ஏற்றனர்.
மதுரை மாநகரில் விபத்துக்களை குறைப்பதற்காகவும் மற்றும் பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.