Home செய்திகள் நுரையீரல் புற்று நோய் பாதித்த போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு..

நுரையீரல் புற்று நோய் பாதித்த போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு..

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தைச் சேர்ந்தவர் கே.தேவசங்கரி, 52. கடந்த1967 ஜூன் 1 இல் பிறந்த தேவ சங்கரி, 1991 மே 10ல் முதல்நிலை காவலராக பணியில் சேர்ந்தார். 2004 செப் 15ல் சார்பு ஆய்வாளராக பதவி பெற்றார்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி மகளிர் போலீசில் 2018 ஏப்.4 முதல் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.  இவரது கணவர் கே.பரமசிவன் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர்களது மகள் ஸ்ரீநிதி  மகன் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் பி.இ., படித்துள்ளனர். இவர், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

நுரையீரல் புற்றுநோயால் அவதியடைந்து வந்த தேவசங்கரி டிச. 10 முதல் மருத்துவ விடுப்பில் இருந்தார். நுரையீரல் புற்றுநோய்க்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவசங்கரி சிகிச்சை பலனின்றி மே 1, இரவு 7 மணி மணியளவில் உயிரிழந்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!