7
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை வேலவன்குடியிருப்பு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முத்து,55. வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். அப்போது மீன்பிடித்து கொண்டிருந்த முத்து கடலில் திடீரென தவறி விழுந்து பலியானார். உயிரிழந்த முத்து உடல் வேதாளை தெற்கு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது.
முத்து உடலை, மண்டபம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பினர். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.