Home செய்திகள் வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் – பத்திரிக்கையாளர் சந்திப்பு…

வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் – பத்திரிக்கையாளர் சந்திப்பு…

by ஆசிரியர்

வேலூர் பாராளுமன்ற தேர்தல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது சம்மந்தமாக வேலூர் தேர்தலை ஜனாதிபதி ரத்துசெய்தார். இதுகுறித்து வேலூர் பென்ஸ் பார்க் ஓட்டலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த செய்த தவறால் தேர்தல் ரத்து செய்யப்பிட்டது. வேலூர் தொகுதி மக்கள் இம்முறை வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. வெற்றி பெறுவோம் என்று நினைத்து கொண்டு இருந்த எனக்கு வேதனை ஏற்பட்டது. வெற்றி தள்ளி போய் உள்ளது.

வேலூர் தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று வரும் 19-ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் மனு கொடுத்து உள்ளோம் என்று அவர் கூறினார். இந்த நிகழ்வின் போது பத்திரபதிவு துறை அமைச்சர் வீரமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!