ஜித்தாவில் நடைபெற்ற இலக்கியக் கலை விழா..

ஜித்தா தமிழ் சங்கத்தின் சார்பில் 20.04.2019 அன்று இலக்கியக் கலை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தமிழகத்தைச் சார்ந்த பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகளுக்கும், இந்த பயணத்தில் விசா மற்றும் உம்ராவிற்கான ஏற்பாட்டினை செய்த ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவன இயக்குனர் பொறியாளர் கீழை இர்பான், மேலாளர் சான் கான் உள்ளிட்ட அலுவலர்களுக்கும் பர்வீன் சுல்தானா நன்றியினை தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..