Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று (14/04/2019) நள்ளிரவு முதல் தொடக்கம்..

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று (14/04/2019) நள்ளிரவு முதல் தொடக்கம்..

by ஆசிரியர்

சென்னை, கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை ராமநாதபுரம் உள்பட 13 கடலோர மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற சுழற்சி முறையில் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். கடல் வளத்தை அழிக்கும் மீன்பிடி வலைகளை பயன்படுத்தி தொழில் செய்ய அரசு தடை செய்துள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15 முதல் 45 நாட்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15 முதல் 45 நாட்கள் , தமிழக கடலில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துகிறது. கடந்தாண்டு முதல் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 60 நாள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி நடப்பாண்டுக்கான ஜூன் 14 ஆம் தேதி வரை 60 மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது.

.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!