11
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மேலத்தெரு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 45 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை பொங்கல் விழாவும் இரவு பூக்குழி இறங்க விழாவும் நடைபெற்றது.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் திருவிழாவிற்காக வெளியூரிலிருந்து பணியாற்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பக்தியுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.