நிலக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அக்கட்சியினரே கண்டன தீர்மானம்…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நிலக்கோட்டை மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சார்பாக நிலக்கோட்டை தமாக கட்சி அலுவலகத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்திற்கு மாநில, செயலாளர் பெரியசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். அக்கூட்டத்தில் பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  * தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிலக்கோட்டை வருவதாக கூறிவிட்டு     பின்னர் கட்சியினரே கட்சிக்காரர்களுக்கு யாரிடமும் தெரிவிக்காமல் வேண்டுமென்றே ரத்து செய்ததை கண்டிக்கிறோம்..               

* திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகம் நிலக்கோட்டை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நம் தலைவர் வத்தலக்குண்டுக்கு வருவதை தெரிவிக்காமல் புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கிறோம்.,

* கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆணையின்படி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் வேலை பார்ப்பதற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  தயாராக இருந்தபோதும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் நமது கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அதிருப்தி உள்ளதை கூட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம்,                                     

நிலக்கோட்டை வட்டாரத்தில் கட்சியை நிலவே நிலைமையை மாநில மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகனிடம் உண்மை நிலைமையை மறைத்த மாவட்ட நிர்வாகத்தை இந்த கூட்டத்தின் வாயிலாக கண்டிக்கிறோம்.                

இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அழகர்சாமி பாலுச்சாமி நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..