9
தர்மபுரி பாப்பாரப்பட்டி பாலக்கோடு ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் ராஜசேகர் அவருக்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். நேற்று (09/4/2019) மாலை 6 மணி அளவில் பாலக்கோட்டில் கமலஹாசன் தனது வேட்பாளர் ராஜசேகருக்கு டார்ச் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் போது எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் தொகை கூடியதால் இந்த கூட்டம் கட்சிக்காக சேர்ந்த கூட்டம் இல்லை ஒரு நடிகனை பார்ப்பதற்காக சேர்ந்த கூட்டமா என்று கட்சித் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே கமல் பேசும்போது இந்தியாவை முழுவதும் குடிசை இல்லாத இந்தியாவா மாற்றுவேன் தர்மபுரியில் சிப்காட் நிறுவனம் அமைக்கப்படும் வருடத்திற்கு 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பாலக்கோட்டில் பேசினார்.
You must be logged in to post a comment.