Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனை சரமாரியாக பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு..வீடியோ..

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனை சரமாரியாக பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு..வீடியோ..

by ஆசிரியர்

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி கடந்த 25-ஆம் தேதி மாலை விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதை அடுத்து காவல் துறையினர் விடிய விடிய சிறுமியை தேடியுள்ளனர்.

பின்னர் 26ஆம் தேதி காலை அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே டீசர்ட் ஒன்றில் சுற்றப்பட்டு சிறுமியின் சடலம் போலீஸாரால் மீட்கப்படடு பிரேத பரிசாதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறுமியின் உறவினர்களின் புகாரின் பேரில் அந்த ஊரை சேர்ந்த சந்தோஷ்குமார் உள்ளிட்டோரை விசாரணை நடத்தினர். இதில் சந்தோஷ்குமார் மட்டுமே அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக பாலியல் குற்றவாளி சந்தோஷ்குமாரை காவல்துறையினர் அழைத்து வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் பாலியல் குற்றவாளியை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!