Home நகராட்சிகவுன்சிலர் அராஜக போக்கை கையாளும் கீழக்கரை நகராட்சி.. மக்களை அச்சுறுத்தும் பணியில் நகராட்சி மேலாளர்..

அராஜக போக்கை கையாளும் கீழக்கரை நகராட்சி.. மக்களை அச்சுறுத்தும் பணியில் நகராட்சி மேலாளர்..

by ஆசிரியர்

கீழக்கரையில் விதிக்கப்பட்டு வரும் சட்டவிரோதமான வரிவிதிப்பை கண்டித்து கடந்த 18/03/2019 அன்று அனைத்து ஐக்கிய ஜமாத் சார்பாக நிரந்தரமான புதிய ஆணையர், சொத்து வரிக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த முடிவுகள் அனைத்து முறையான ஆவுணங்கள் மற்றும் முகாந்திரத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் வீட்டு வரி சம்பந்தமான வேறு வழக்குக்கு நீதிமன்றம் 5000/- அபாரதம் விதித்த செய்தியின் நகலை எடுத்து மக்களை பயமுறுத்தும் நோக்கில் நகராட்டி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது சம்பந்த மக்கள் டீம் அமைப்பின் காதர் கூறுகையில், ” இது முழுக்க முழுக்க நகராட்சி நிர்வாத்தின் அராஜக போக்காகும், மேலும் பொதுமக்களின் உரிமைகளை மீறுவதாகவும், அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது. இச்செயல் மிகவும் கண்டிக்கப்பட கூடியது. நகராட்சி நிர்வாகம் எவ்வகையான அச்சுறுத்தல் நடவடிக்கை எடுத்தாலும், சட்ட ரீதியாக சந்திக்க கீழக்கரை மக்கள் தயாராக உள்ளனர்” என்று கூறி முடித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!