Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை நகராட்சி அலட்சியத்தால் குப்பை மேடாகி வரும் பைத்துல்மால் பகுதி..

கீழக்கரை நகராட்சி அலட்சியத்தால் குப்பை மேடாகி வரும் பைத்துல்மால் பகுதி..

by ஆசிரியர்

கீழக்கரை இஸ்லாமியா பைத்துல்மால் கட்டிட அருகில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியை நகராட்சி ஊழியர்கள் எந்த அறிவிப்பும், மாற்று ஏற்பாடும் செய்யாமல்  அகற்றியதால் அப்பகுதி மீண்டும் சாலையை மறைத்து குப்பை மேடாக மாறி வருகிறது.

அத்துடன் அப்பகுதியில் மாடுகளும் குப்பைகளை கிளரி அட்டகாசம் செய்கின்றன. இதனால் அவ்வழியாக வாகனங்கள் மற்றும்  பேருந்துகள் செல்ல தடுமாற்றம் ஏற்படுகிறது. இதனால் பள்ளிகளி, கல்லூரிகள் வாகனங்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் தாமதம் ஆகிறது. நகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டியை சரிசெய்து மீண்டும் அவ்விடத்தில் வைக்க பகுதிவாசிகளின் கோரிக்கை வைக்கின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!