நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே கோவிலாண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டுவிழா 30.03.19 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, கடையநல்லூர் வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி அனைவரையும் வரவேற்று பேசினார். ஆசிரியர் ஹரிஹர சுப்பிரமணியன் ஆண்டு அறிக்கை வாசித்தார். ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை மூக்கையா,அமல்ராஜ், செல்வராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்த இடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற இவ்வாண்டு விழாவில் வியகப்பன், வேளாங்கண்ணி செல்வம்,ஆசிரியர்கள் மோதிலால்,உஸ்மான், அசோகன்,மீனாட்சி, கலாராணி, சுப்புலெட்சுமி, இந்திர பிரியதர்ஷினி, காந்தி, செல்வராணி, தனராஜ், கதிரேசன், முத்துக்குமார், கல்லகநாடி செல்வி, பிருந்தா, அமைப்பாளர் முருகன், உதவியாளர் செல்வம் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், ஊர்ப்பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.