இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரம் நடத்திய மாபெரும் மக்கள் சங்கமம்…

சவுதி அரேபியாவில் இந்திய மக்களுக்காக தொண்டாற்றி வரும்இந்தியாப்ரேடர்னிட்டிபோரம் ரியாத் தமிழ் பிரிவின் சார்பாக“ஃப்ரேடர்னிட்டிபெஸ்ட் 2019″ மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி சவுதி அரேபியா தலை நகர் ரியாதில் கடந்த வெள்ளிக்கிழமை (29-03- 2019) அன்று நடைபெற்றது.

சவுதி அரேபியாவில் வாழும் இந்திய மக்களுக்காக பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் இந்தியாப்ரேடர்னிட்டிபோராம் ரியாத் தமிழ் பிரிவின் சார்பாக  தமிழ் பேசும் மக்களை ஒன்றினைத்து மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி அல்கசீம்ரோட்டில் அமைந்துள்ள பால்ம் ரிசார்ட்டில் வைத்து காலை 9:30மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது.

இந்தியாப்ரேடர்னிட்டிபோரத்தின் ஜோனல் தலைவர் பஷீர்இங்கபுழா அவர்களின் துவக்க உரையோடு காலை 9:30 மணிக்குநிகழ்ச்சி துவங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் Er.அஜ்மல் கான் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் நோக்கத்தை மாவட்ட செயலாளர் சகோதரர் Er.பைஜல்எடுத்துக்கூறினார்.

இச்சங்கமத்தில் குழந்தைகளுக்கான கிராத் ஓதும் போட்டி, விளையாட்டுப்போட்டிகள், ஆண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, தமிழர் கலாச்சார உரியடித்தல் போட்டி மற்றும் பல  விளையாட்டு போட்டிகள், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், மருதாணி இடும் போட்டி, பழங்களில் படம் செதுக்கும்  போட்டி, வினாடி வினாப்போட்டி  என பல்வேறு போட்டிகள்நடத்தப்பட்டது.

இச்சங்கமத்தின் சிறப்பு அம்சமாக  மதியம் ஜும்மா தொழுகைக்குபிறகு  கண்காட்சி Dr.காலித் (Ministry of Health) திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் சிறுவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களே உருவாக்கிய பல்வேறு வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை செயல்முறை விளக்கங்களுடன் குழந்தைகள் செய்து காண்பித்தனர். மேலும் வரலாற்று சம்பவ பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் தன்னார்வ தொண்டு அமைப்பின் பணிகள் மற்றும் இந்தியா 2047″ என்ற தலைப்பில் பல்வேறுவகையான ஆவணங்கள் மற்றும் செய்திகள், இந்தியன் சோசியல் ஃபோரம் சமூகசேவப்பணிகள், இந்தியாப்ரேடர்னிட்டிபோராம்சமூகசேவப்பணிகள் இடம்பெற்றிருந்தது.  பங்கெடுத்த அனைத்து மக்களும் இக்கண்காட்சியை கண்டு ரசித்தனர். சிறந்த கண்காட்சி பொருளுக்கான தேர்வை பார்வையாளர்கள் ஓட்டு முறையில் தேர்ந்தெடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு மற்றும், தேநீர், ஸ்நாக்ஸ், குழந்தைகளுக்கான தின்பண்டங்களும் வழங்கப்பட்டன.

மாலையின் துவக்கமாக பெற்றோர்களுக்கான குடும்ப வாழ்வியல்நிகழ்ச்சியை பொறியாளர் அல் அமான்  சிறப்பாக நடத்தினார். பெண்களுக்கான மார்பக புற்று நோய் குறித்தவிழிப்புணர்வு நிகழ்ச்சி சகோதரி ஆமினா ஹசன் அவர்களால்பெண்களுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது, மற்றும் மாணவ மாணவியருக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியை  பிர்தவுஸ்  நடத்தினார்.

மாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் குழந்தைகளின் வரவேற்பு கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் ஜனாப் ஹைதர் அலி (Universal Inspection Company Riyadh  Branch Manager), மஜ்மா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் முஹம்மது யாசின், ரியாத் தமிழ் சங்கம் தலைவர் ஜனாப் ஃபக்ருதீன், இந்தியன் சோஷியல்போராம் ஜித்தாதமிழ் பிரிவின் தலைவர் பொறியாளர் அல் அமான், இந்தியன் சோஷியல்போராம் தம்மாம் தமிழ் பிரிவின் தலைவர் மெளலவி முஹம்மது இக்பால் மன்பயி, இந்தியன் சோஷியல் போராம் ரியாத் தமிழ் பிரிவின் தலைவர் ஜாபிர், இந்தியா ஃப்ரேடர்னிட்டிபோராம் ரியாத் மண்டல செயலாளர் முஹம்மது ராஃபி  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர். இறுதியாக மெளலவி முஹம்மது இக்பால் மன்பயி சிறப்புரை ஆற்றினார்.

போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக ரியாத் மண்டல செயற்குழு உறுப்பினர் ரமுஜுதீன் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..