இஸ்லாமிய கல்விச் சங்கம் கீழக்கரை பகுதியில் பல இறைப் பணிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக வருகிற ஏப்ரல் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் தமிழகத்தின் தலை சிறந்த மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள். மேலும் வெளியூர்களை சேர்ந்த தாஃவா குழுக்களின் அரங்கங்களும் இடம்பெறயிருக்கின்றது. இந்த கண்காட்சியை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கீழக்கரை அளவிலான இஸ்லாமிய போட்டிகளும் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஆலிம், ஆலிமாக்கள், முஅத்தின்கள் ஆகியோர்கள் வருகிற 15 தேதிக்குள் அருகில் உள்ள மத்ரஸாகளை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இப்போட்டிகள் ஏப்ரல் 20 மற்றும் 21ம் தேதி கீழக்கரை மக்தூமியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 10:00 முதல் மாலை 05:00 வரை நடைபெற உள்ளது. இது சம்பந்தமான மேல் விபரங்களுக்கு 9791741708 / 9629265974 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இப்போட்டிகளில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15/04/19 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல் மத்ரஸத்துர் ராழியா,
11/69,PSM மெமோரியல் ஹால்,
VS சாலை,
கீழக்கரை – 623 517.
You must be logged in to post a comment.