Home செய்திகள்கீழக்கரை செய்திகள் உசிலம்பட்டியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஈவிகேஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு…

உசிலம்பட்டியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஈவிகேஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு…

by ஆசிரியர்

பெற்றோர்கள் மோடிக்கு தவறாக பெயர் வைத்துவிட்டார்கள். மோடிக்கு பதிலாக கேடி என வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என திமுக கூட்டணி கட்சி சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்கமாக பேசினார்.

தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உசிலம்பட்டி தொகுதியில் தேர்தல் ஆலோசனை குறித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன் மோடியின் பெற்றோர்கள் அவருக்கு தவறான பெயரை வைத்துவிட்டார்கள் எனவும், அவருக்கு மோடிக்கு பதிலாக கேடி என வைத்திருக்கலாம் எனவும் பகிரங்கமாக பேசினார். மேலும் மோடி அவர்கள் தேர்தலுக்கு முன்பு எத்தனை வாக்குறுதிகளை கொடுத்திருப்பார் என உங்களுக்கு தெரியும் ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி பேசினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!