நிலக்கோட்டை இடைத்தேர்தலில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட் வரும் அரசு ஊழியர்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதில் தேசிய கட்சி  கட்சி முதல் மாநில கட்சி வரை கூட்டணி அமைத்தும் சுயேச்சைகளும் போட்டியிட்டு இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அணைத்து கட்சிகளும் தங்களின் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் இன்று நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையில் திமுக வேட்பாளர் சவுந்தர பாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது நிலக்கோட்டை வட்டார அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் சேகர் என்பவர் அரசு ஊழியர்கள் எந்த ஒரு அரசியல் கட்சிக்காக தேர்தல் பிரச்சரம் செய்ய கூடாது என்ற விதியையும் மீறி இந்த பகுதி மருத்துவர் என்ற தனது செல்வாக்கைப் பயன்படுத்தி திமுக வேட்பாளருக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..