மதுரை மாநகர் பைபாஸ் சாலை பசும்பொன் நகரில் உள்ள அமுதம் ரேஷன் கடை எண் 28 மக்கள் நலனுக்காக அல்லாமல், தங்களின் வசதிக்கேற்பவே திறக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இன்று (18/03/2019) மதியம் 12 மணி வரை கடை பூட்டியிருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். இது தொடர் கதையாக உள்ளதாகவும், கடை ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஏழை நடுத்தர மக்களுக்கு உரிய ரேஷன் பொருள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விடுத்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.