முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 18/03/2019, 11.30 மணியளவில் தன் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிராபானு கமால் தலைமையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வாணி கிராமம், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் Dr.H.பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். பின்பு முதலாமாண்டு மாணவி ஆங்கிலத் துறையைச் சார்ந்த C.அருணா பிரித்தியும், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த S.நிவேதிதாவும் சுத்தத்தை பற்றி மாணவ மாணவிகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தனர். மேலும்,” சுத்தம் பேணுவோம், சுகம் காணுவோம்” என்றும் சுத்தம் சுகம் தரும் சுகாதாரம் நாட்டைக் காக்கும்” என்று உறுதிமொழி எடுத்தனர். இறுதியாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதல்வர் M.உமாதேவி நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
You must be logged in to post a comment.