திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை (பாண்டி என்ற திருப்பூர் பாண்டி அவரது மனைவி பஞ்சவர்ணம்) வழக்கில் மேலும் பாறைபட்டியை சேர்ந்த பாரதிபாண்டியன் 26 மதுரை இரும்பாடியை சேர்ந்த சுரேஷ் 24 ராஜபாண்டி 25 மூவரையும் புறநகர் டிஎஸ்பி வினோத் தலைமையில் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் சார்பு ஆய்வாளர்கள் இளஞ்செழியன், பாஸ்டின் தினகரன், தயாநிதி மற்றும் காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டு ,பயங்கர ஆயுதங்கள், நான்கு சக்கர வாகனம் ஒன்று ஆகியவற்றை கைப்பற்றினர். மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
You must be logged in to post a comment.