கடந்த 04.2.2013 அன்று மதுரை மாநகர், புட்டுத்தோப்பு செக்கடி தெரு, ஸ்ரீ வீரமுனியாண்டி கோவில் அருகில் உள்ள மாட்டுக்கொட்டம் முன்பு வைத்து பிரபு என்பவரை கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலையை (1) சிலம்பரசன் (2) செல்வம் என்ற பரட்டை செல்வம் (இறந்துவிட்டார்), (3) தமிழ்செல்வன் (4) முருகன் (5) சுந்தர்ராஜன் என்ற கீரைத்துறை சுந்தர் (6) ஜெயச்சந்திரன் என்ற ஜெயந்த் (7) ரமேஷ் என்ற சிங்கம் ரமேஷ் ஆகிய ஏழு நபர்கள் சேர்ந்து அருவாள் மற்றும் கத்தியால் குத்தி பிரபுவை கொலைசெய்தனர்.
எனவே C5 கரிமேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து இவ்வழக்கு நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவந்தது. தற்சமயம் ஐந்தாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) மாண்புமிகு நீதிபதி திரு.மதுசூதனன் இவ்வழக்கை விசாரணை செய்தார்கள். விசாரணையின் முடிவில் ஏழு நபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் எதிரிகள் ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் தலா ரூபாய் 5000/- விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரி 2013 ம் வருடம் C5 கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீத்தாராமன் (தற்பொழுது திருச்சி மாவட்ட காவல் உதவி ஆணையர்) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் பாராட்டினார்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.