Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பரமக்குடி தமிழ் பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தின விழா..

பரமக்குடி தமிழ் பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தின விழா..

by ஆசிரியர்

உலக மகளிர் தின விழா இன்று 10-03-2019 காலை 10 மணி அளவில் பரமக்குடி தமிழ் பல்கலைக்கழகத்தில்
மிகச்சிறப்பாக நடைபெற்றது. இளையான்குடி ஒன்றிய பொறுப்பாளர் சேவியர் இந்த நிகழ்விற்கு வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு மாவட்ட மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் கோகிலா தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் முன்னிலை வகித்து மக்கள் பாதையை பற்றியும் , சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு என்ன என்பதை பற்றியும் மிக தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட தமிழுக்கும் அமுதென்று பேர் திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் கலந்து கொண்டு சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் தமிழக பெண்களின் பங்கு என்ன என்பதை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட திடல் திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆயிர வைசிய மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் ஜெயபிரமிளா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆயிர வைசிய மெட்ரிகுலேசன் பள்ளி துணை முதல்வர் கவிதா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்வில் வழக்கறிஞர் குமரவேல் , பேராசிரியை காயத்ரி தேவி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவி கண்மணி இராவணன் குமார் அவர்கள் சகாயம் ஐயாவின் நேர்மையை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினார்.

இராமநாதபுரம் மாவட்ட தாய்மண் திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பசுமை தினேஷ் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினார்.முதுகுளத்தூர் ஒன்றிய துணை பொறுப்பாளர் பேராசிரியர் கனிச்செல்வம் நன்றியுரை கூறினார். இந்த நிகழ்வை அபிமன்னன் , கமலக்கண்ணன் ஆகியோர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.இந்த நிகழ்வில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!