மதுரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாலமுத்தழகு பைனான்ஸ் குழுமம்&பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தில் சார்பாக சுமார் 70 பெண்கள் கலந்து கொண்ட பெண்மையை போற்றும் விதமான பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெகநாத்மிஸ்ராஅவர்களின் துணைவியார் திருமதி.பரமேஸ்வரி ஜெகநாத்மிஸ்ரா அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
இப்பேரணி கொன்னவாயன் சாலை,இ.எஸ்.ஐ மருத்துவமனை,செல்லூர் பைபாஸ் ரோடு,ஆரப்பாளையம் ரவுண்டானா வரை ஊர்வலமாக சென்றது. இப்பேரணிக்கான ஏற்பாடுகளை இந்நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் ஆர்த்தி செய்திருந்தார்.
You must be logged in to post a comment.