Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அகமுடையார் சமுதாயத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ? அவர்களுக்கே எங்கள் வாக்கு…

அகமுடையார் சமுதாயத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ? அவர்களுக்கே எங்கள் வாக்கு…

by ஆசிரியர்

திருமங்கலத்தில் மருது சேணை சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் பேட்டி எங்களுக்கு ஒருவரை வெற்றி பெற வைக்கவும் தெரியும். உதவி செய்யவில்லை என்றால் தோற்கடிக்கவும் தெரியும் – ஆதிநாராயணன்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கண்டு குளம் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த மருதுபாண்டியர்கள் சிலையில் தலையை துண்டித்து மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அரசின் சார்பிலேயே சிலை அமைத்து தருவதாகவும் ஆனால் வேறு இடத்தில் அமைத்துத் தருவதாகவும் கூறியதால் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர். இந்திலையில் இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் சிலையை மீண்டும் நிறுவ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து மருது சேணை அமைப்பின் சார்பில் திருமங்கலத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு மருது சேணை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருது சேணை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் இந்த நாட்டு விடுதலைக்காக தங்கள் உயிரை இழந்தவர்கள் . யார் யாருக்கோ சிலை வைக்கும் அரசு சேதமடைந்த சிலைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. எனவே அரசு தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்த அவர் தமிழகம் முழுவதும் தங்களது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 3 கோடி பேர் இருப்பதாகவும் எனவே அரசு தங்களுக்கு உதவி செய்தால் மட்டுமே வாக்களிப்போம் எனவும் எங்கள் சமுதாயத்தினரால் ஒருவரை தேர்தலில் வெற்றி பெற வைக்கவும் முடியும் . சமுதாயத்திற்கு உதவிட மறுத்தால் தோற்கவைக்கவும் முடியும் என தெரிவித்தார்.

பேட்டி: ஆதிநாராயணன் – தலைவர், மருது சேணை அமைப்பு

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!