திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அபாரம் பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் ஆஷா வயசு 17. இவர் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த கடந்த 5ஆம் தேதி காலையில் வீடு வீட்டில் வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பி வந்தவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. ஆஷாவை பல இடங்களிலும் உறவினர் வீடுகள் மற்றும் மதுரை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஆஷாவின் தாயார் சத்யா நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது பிளஸ்-2 பரீட்சை நடந்து வருவதால் பரிட்சைக்கு பயந்து ஆசை உறவினர்கள் வீட்டுக்கோ அல்லது கோபித்துக்கொண்டு வேறு எங்கும் சென்று விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். பிளஸ்டூ மாணவி மாயமானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.