Home செய்திகள் தீவு மணல் திட்டில் கேட்பாரற்று கிடந்த 900 கிலோ பீடி இலை இந்திய கடலோரக் காவல் படை பறிமுதல்..

தீவு மணல் திட்டில் கேட்பாரற்று கிடந்த 900 கிலோ பீடி இலை இந்திய கடலோரக் காவல் படை பறிமுதல்..

by ஆசிரியர்

ஹோவர் கிராப்ட் எச் -190ல் இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள் தென் கடல் பகுதியில் இன்று நண்பகல் 11:30 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது 3 ஆம் திட்டு பகுதியில் பாலித்தின் பண்டல்கள் கேட்பராற்று கிடந்தன. அதை கைப்பற்றிய வீரர்கள் பண்டல்களை பிரித்து பார்த்தனர். அதில் பீடி இலைகள் என தெரிந்தது. தைப்பற்றிய 900 கிலோ பீடி பண்டல்களை, ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் மதியம் 2 :45 மணியவில் ஒப்படைத்தனர்.

இதன் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த இரு வாரங்களில் இலங்கைக்கு கடத்த முயன்ற 3 ,500 கிலோ பீடி இலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ​

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!