11
ஹோவர் கிராப்ட் எச் -190ல் இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள் தென் கடல் பகுதியில் இன்று நண்பகல் 11:30 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது 3 ஆம் திட்டு பகுதியில் பாலித்தின் பண்டல்கள் கேட்பராற்று கிடந்தன. அதை கைப்பற்றிய வீரர்கள் பண்டல்களை பிரித்து பார்த்தனர். அதில் பீடி இலைகள் என தெரிந்தது. தைப்பற்றிய 900 கிலோ பீடி பண்டல்களை, ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் மதியம் 2 :45 மணியவில் ஒப்படைத்தனர்.
இதன் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த இரு வாரங்களில் இலங்கைக்கு கடத்த முயன்ற 3 ,500 கிலோ பீடி இலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.