Home செய்திகள் கீழக்கரை பகுதி போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் மாவட்ட செயலாளர்அறிமுகக் கூட்டம்…

கீழக்கரை பகுதி போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் மாவட்ட செயலாளர்அறிமுகக் கூட்டம்…

by ஆசிரியர்

கீழக்கரை பகுதி போலீஸ் பொது மக்கள் நல்லுறவு சங்கச் செயலாளர் நிஷா ஃபவுண்டேஷன் சித்திக் என்பவர் சமீபத்தில் அப்பதவியில் இருந்து  நீக்கப்பட்டதால் புதிய மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்யும் கூட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் அருகில் தனியார் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அருளாலும் பெருமாள் தலைமை வகித்தார். கீழக்கரை நகர் செயலாளர் முத்துக்குமார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி சேகு. மாவட்ட பொருளாளர்அப்துல் நாசர். மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹாரூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. ஹாஜா முகைதீன் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக ஏர்வாடி காவல்துறை சார்பு ஆய்வாளர் பொந்து முனியாண்டி. செந்தில் குமார். கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் அப்பா சுந்தரம் சமூக ஆர்வலர் ஆபிரஹாம் ஆகியோர் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர். ஏர்வாடி ஊராட்சி பொருளாளர் அப்துல்லா நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!