7
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக புதிய கட்டிடத்தின் பணிக்கான பூமி பூஜையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் திரு.நடராஜன் தலைமையில், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா அவரகள் முன்னிலையில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் திரு எஸ்.பி.அம்ரித், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுல்லான் என்ற செல்வம், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.