திருவாடானை அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 7 பேர் மீது வழக்கு..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இளங் குன்றம் கிராமத்தில் பாண்டி முனீஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு நேற்று (27.02.19) மாலை 4 மணி அளவில் மஞ்சு விரட்டு நடந்தது. அப்போது அங்கு ரோந்து சென்ற திருவாடானை சார்பு ஆய்வாளர் செல்லமுத்து இது குறித்து விசாரித்தார். அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக இளங் குன்றம் கிராமத்தைச் சேர்ந்த காசி, மகாலிங்கம், குமார், ராஜா, இன்னாசி, ராஜேந்திரன், பொன்னையா ஆகியோர் மீது சார்பு ஆய்வாளர் செல்லமுத்து வழக்கு பதிந்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..