5
மதுரை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். மதுரையில் இன்று (22/02/2019) நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார்.
இராமநாதபுரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இன்று பிற்பகல் 1 மணியளவில் வந்தார். உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். அமித்ஷா வருவதை அறிந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்து சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கும் தொகுதிகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
கீழை நியூஸுக்காக.. மதுரை நிருபர் கனகராஜ்.
You must be logged in to post a comment.