11
மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்த தமிழ்நாடு தேவர் பேரவை மாநில தலைவர் முத்தையாதேவர் கூறுகையில்:-
கள்ளர், மறவர், அகமுடையார், வல்லம் பர், துளுவவேளாளர் ஆகிய உட்பிரிவுவுகளை ஒன்றாக இணைத்து தேவர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் எனவும், மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் தேவர் திருமகனார் பெயரை உடனடியாக சூட்டிட வேண்டியும், மாமன்னர் மருதுபாண்டியர்கள் பெயரை திருச்சி விமான நிலையத்திற்கு சூட்டிட வேண்டியும், தேசிய தலைவர் தேவர் திருமகனாருக்கு பாரதரத்னா விருது அறிவித்திட வேண்டியும், மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறந்த ஊரான நரிக்குடி முக்குலத்தில் மணிமண்டபமும், வெண்கல சிலையும் நிறுவிட வேண்டியும்,ஏழாம் வகுப்பு தமிழ் பாடதிட்டத்தில் உண்மை வரலாற்றை பதிவு செய்வதோடு பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் என்று பதிவு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்
You must be logged in to post a comment.