கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மார்க்க பணியில் மட்டுமல்லாமல் பல்வேறு சமுதாய சீர்திருத்த பணிகளும் மேற்கொண்டு வருகிறது.
இதன் வரிசையில் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை இன்று (19/02/2019) மக்கள் மத்தியில் புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வண்ணம் மணீஸ் பேக்கரி அருகில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இந்நிகழ்வில் 1000கும் மேற்பட்ட விழிப்புணர்வு பிராச்சார பிரசாரங்கள் மதரசா மாணவர்களால் பொதுமக்கள் மத்தியில் வழங்கப்பட்டது. மேலும் புகை பதக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அதில் இருந்து மீளும் வகையில் “NICOTEX” எனும் மருந்து வகை பொருள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுள்ளவர்களுக்கு திருக்குர்ஆனும் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.