இராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகன் குணசேகரன், 22. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இவர் சக்கரக்கோட்டை ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். அவரது உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றினா. ரயிலில் அடிபட்டு இறந்தாரா? யாரேனும் அவரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.