வேடசந்தூர் அருகே கூலித்தொழிலாளி வீட்டிற்குள் சொகுசு கார் புகுந்து விபத்து…வீடியோ..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று (17.02.19) கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கூலித் தொழிலாளி வீட்டில் சொகுசு கார் உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது.

அதிஷ்டவசமாக சுற்றியிருந்த பத்துக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர் தப்பினர். விபத்து நடந்த பகுதியை நிருபர்கள் படம் பிடிக்க சென்றபோது அரசியல் கட்சியினர் அதன் உரிமையாளரை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..