தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இணையதள கருத்தரங்கம்..

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நூலகத்துறை சார்பாக அறிவியல் ஆராய்ச்சி  எழுத்துக்கள் முறைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை பற்றிய பயிலரங்கம் 14.02.2019 அன்று நடந்தது. தலைமை நூலகர் முனைவர் எஸ் சிராஜ் நிஷா  வரவேற்றார். முதல்வர் முனைவர் எஸ் சுமையா   தலைமை வகித்தார். சென்னை  பல்கலைக்கழகம் நூலகத்துறை முன்னாள் பேராசிரியர் டாக்டர் பி ரமேஷ் பாபு அவர்கள் சிப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளும், பேராசிரியர்களும், வேதாளை ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரிகளிலிருந்து மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். நூலகர் திருமதி சுமதி நன்றியுரை வழங்கி நிகழிச்சி இனிதே நிறைவடைந்தது.    

புனித ரமலான் வாழ்த்துக்கள்..