திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல்துறைநில் ராஜேந்திரன் தலைமை காவலராக (DGL1573) பணியாற்றி வருகிறார். நேற்று (14/02/2019) இரவு 9.00 மணிக்கு பணி முடிந்த பின்பும் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் பிரிவு செக்போஸ்டில் 10.00.க்கு தலைமை காவலர் ஒருவர் மட்டும் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை வழிமறித்து தனியாக வாகன சோதனை செய்துள்ளார்.
பின்னர் வண்டி இன்சூரன்ஸ் லைசென்ஸ் ஆகியவைகளை மது போதையில் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் ஐயா தாங்கள் அளவுக்கு மீறி மது போதையில் உள்ளீர்கள் இது நியாயமா? என்று இருசக்கர வாகனத்தில் வந்தவர் கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம். முற்றி தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இவ்வாறு பொறுப்பில் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகளே அநாகரீகமாக நடந்து கொள்ளும் விதம் பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
கீழை நியூஸுக்காக:- முபாரக் அலி
You must be logged in to post a comment.