Home செய்திகள் நத்தம் மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டுதல் தொடங்கியது..

நத்தம் மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டுதல் தொடங்கியது..

by ஆசிரியர்

தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவையொட்டி உலுப்பகுடி கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்துவந்து நத்தம் அருள்மிகு சந்தனக்கருப்பு கோயிலிலிருந்து மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு அதி விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அலங்காரம் நடைபெற்றது. மஞ்சள் துணியில் அம்மன் உருவம் பதிக்கப்பட்ட துணியில் காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது இன்று முதல் பக்தர்கள் 15 நாள் விரதம் இருந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!