Home செய்திகள் இராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு சரிபார்ப்பு சீட்டு செயல் விளக்க விழிப்புணர்வு வாகன பிரசாரம்..

இராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு சரிபார்ப்பு சீட்டு செயல் விளக்க விழிப்புணர்வு வாகன பிரசாரம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு, வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 28 விழிப்புணர்வு குழு செயல் விளக்க வாகனத்தை  மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.

4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் (விவி பேட்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள 28 குழுக்களை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்  இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சுருக்கத்திருத்தம்-2019ன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி 11,22,589 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 784 இடங்களில் 1367 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக 3,310 மின்னணு வாக்கு (இயந்திரங்கள் மற்றும் 1.800 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 1.800 வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள், முதல்நிலை சோதனை நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதனடிப்படையில்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தலா 7 குழுக்கள் வீதம் 28 விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், துணை வட்டார வளர்ச்சி நிலை அலுவலர் தலைமையில் ஒரு உதவியாளர், 2 அலுவலக உதவியாளர்கள, ஒரு காவலர் என 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு அலுவலர்கள் அந்தந்த தொகுதி வாரியாக வாக்குச்சாவடி மையங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 784 இடங்களுக்கு நேரடியாகச் சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்ப்பு ( விவி பேட்) தணிக்கை இயந்திரங்கள் மூலம் செயல்முறை விளக்கமளித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர். இப்பணி நேற்று தொடங்கி 5 நாள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என  தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் .பி.விஷ்ணுசந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.மதியழகன்,உதவி ஆணையர் கலால் எஸ்.ரவிச்சந்திரன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டாக்டர் எஸ்.எஸ். கண்ணபிரான் உட்பட தேர்தல் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!