தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா..

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள எரிச்சநத்தம், கிருஷ்ணநாயக்கன் பட்டி, குமிழம்குளம், மருதநத்தம், ராமலிங்கபுரம்,அம்மன் கோவில்பட்டி, கோப்பைய நாயக்கன்பட்டி, முருகன் ஏரி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு தமிழ் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் OA.நாராயணசாமி விவசாயிகளுக்கான அடையாள அட்டையை வழங்கினார்.

இவ்விழாவில் விருதுநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மதுரை மாவட்ட தலைவர் சுப்பையா, பாஸ்கரன் மாரிசாமி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..